Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, April 16, 2014

யாழ்ப்பாணத்தில் குருநகா் யுவதி கிணற்றில் வீழ்ந்து இறப்பதற்கு காரணமான பாதிரிகள் இவா்கள் (புகைப்படங்கள்)

யாழ்ப்பாணத்தில் குருநகரில் இளம் யுவதி இறப்பதற்கு காரணமானவா்கள் பற்றிய முழுவிபரங்களும் இன்னும் சில 
மணித்தியாலங்களில்......திருமறைக் கலாமன்றத்தில் நிகழ்ச்சி பாா்த்துவிட்டுத் திரும்பிய யுவதிக்கு நடந்தது என்ன?? தொடந்து காத்திருங்கள்.... யுவதியின் சாவுக்கு காரணமானவா்கள் இவா்கள்தான்...இவா்களின் முழுமையான உருவங்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் தரப்படும்.....

நடந்தது என்ன??

இது தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் தாயான ஜெரோன் மேரி புஸ்பராணி என்பவர் தெரிவிக்கையில், “எனது மகள் படித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் அருகில் இருந்த பெரிய கோவில் சபையினுடைய இரு பாதிரிமார் எனது மகளை மறைக் கல்வி போதிக்க அனுப்புமாறு கோரினர். வீட்டில் சும்மதா தானே இருக்கிறாள் போய் மறைக் கல்வி கற்பிப்பது நல்லம் தானே என நானும் ஒம் என்று விட்டுட்டேன். ஆனால் மறைக்கல்வி போதிக்கச் சென்ற எனது மகளை அங்கிருந்த பிரதான பாதிரியாரின் உதவியாளர்களான திருச்செல்வம் குயின்றன் பெர்னாண்டோ, மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.

அங்கிருந்து வந்ததும் எனது மகள் ஒரே சோகமாய் அமர்ந்திருப்பாள். அவளது தொலைபேசிக்கு ஒரே அழைப்பு வரும். அதை அவள் கட் பண்ணுவாள். இந் நிலையில் அவளிடம் நடந்தவற்றை விசாரித்தேன். அப்போது தான் அவள் கூறிய கருத்துக்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த உதவிப் பாதிரியார் ஆன திருச்செல்வம் குயின்றன் பெர்னாண்டோ என்பவர் தன்னை காதலிக்குமாறு எனது மகளை கேட்டுள்ளார். அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்க எங்க போனாலும் என்னை மறக்க கூடாது என்னுடன் தொடர்பில இருக்கணும் எனக் கூறியதுடன் மேலே உள்ள தனது றூமுக்கும் வருமாறு உதவிப் பாதிரியார் நிக்சன் வற்புறுத்தியுள்ளார். “இதனை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால் உன்னைப்பற்றி கூடாமல் சொல்லுவன்” என மிரட்டியுள்ளார்.         மேலும்..