இலங்கை மீதான போர்க்குற்றத்தை கடந்த மார்ச் மாதத்தில் நான் ஜெனிவாவில் வலியுறுத்தினேன். விசாரணை வருவது உறுதியாகி விட்டது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை வருவது உறுதியாகி விட்டது. அதனை சிலர் திசை திருப்பப் பார்க்கின்றனர்.
இதனை சகலரும் அவதானமாக பார்க்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன். லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.