Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, June 27, 2014

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அநீதிகளிற்கு எதிர்ப்புத்தெரிவித்து கனடாவில் நடைபெற்ற கவனஈர்ப்புப் போராட்டம்

 www.seithy.com 
  இலங்கை தீவில் மதச் சிறுபான்மை மக்கள் குழுவில் ஒருசாராரான இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் மிகக் கொடூரமான சிங்கள பௌத்த பேரினவாதிகளினதும் அவர்களுக்கு துணை நிற்கும் ஸ்ரீலங்கா அரசினதும் அநீதிகளிற்கு எதிர்ப்புத்தெரிவித்து எழுச்சி மிக்க கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று ஸ்கார்புரோ நகரில் Markham Road and Sheppard Avenue சந்திப்பில் மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

எம் சகோதரர்களான இஸ்லாமிய சகோதரர்களுக்கு நடக்கும் அநீதிகளை கனடியத் தமிழர்களான நாம் வன்மையாக கண்டிப்பது தமிழர்களாக எமது கடன் என்பதை உணர்ந்த மாந்தர்களாக கனடா வாழ் தமிழர்கள் பல்வேறு தேச இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து இன்றைய கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
இதுவரை காலமும் பிரிந்து கிடக்கும் பல்வேறு கனடா வாழ் தமிழீழ உறவுகளும் ஒன்றிணைந்து ஒரு நன்மைக்காக கரம் கோர்த்து போராடிய காட்சி காண மகிழ்ச்சியாக இருந்தது. தமிழர்களின் ஒற்றுமை இலங்கை தீவின் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை இன்னமும் ஒடுக்கப்படும் மாந்தர்களின் ஒற்றுமை மென் மேலும் வலுவாக வேண்டும்.

மதங்கள் கடந்து, மனிதநேயத்துடன், ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் அதேவேளை சிறிலங்கா இனவாத அரசின் திட்டமிட்ட இனஅழிப்பு மத அழிப்பு நடவடிக்கைகளை சர்வதேசத்திற்க்கு வெளிப்படுத்துமுகமாகவும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. மிக எழுச்சியாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் பல மகிழ்வான நினைவுப் பதிவுகளை எமக்குள் விதைத்தது. ஒன்றுபட்ட இனத்தால் வெல்ல முடியாத வெற்றி உலகில் எதுவும் இல்லை. விழ விழ எழுவோம். அநீதியை தகர்த்து நீதியை நிலைநாட்டுவோம். ஒன்று பட்ட மாந்தர்களாய் நீதிக்காக குரல் கொடுப்போம்

மிழினி-
-செந்தமிழினி-