
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம், மா.நடராசா, பிரசன்னா இந்திரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கும் மத்தியிலும் இன்று காலை கட்சி அலுவலகத்தில் நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.