தந்தை செல்வாவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
Posted On 26 Apr 2014
தந்தை செல்வாவின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றுகாலை 9.30அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் நினைவுப் பேருரையை ஓய்வுநிலை நீதிபதி திருநாவுக்கரசு அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ அரசியல் செயலர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தழிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும், பிரதேசசபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், தந்தை செல்வாவின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.


