Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, February 9, 2014

விபசாரத்துள் தள்ளப்படுகின்றனர் நாதியற்ற வடக்கு இளம் பெண்கள் - முதலமைச்சர் கவலை 
news
logonbanner-1கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
 
"இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் இதுவரை காலமும் இல்லாத இந்தப் பழக்கம் தற்போது பரவிவருகின்றது. 
 
இந்தப் பொறிக்குள் அகப்படாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கணிகையர் இல்லங்கள் (விபசார விடுதிகள்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகின்றேன். 
 
நாதியற்ற இளம் விதவைகள், வறுமையின் கோரப்பிடியில் வருந்தி நிற்கும் பல இளம் பெண்கள், இந்த இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்று அறிகின்றேன்.
 
கொழும்பில் இருக்கும்போது, பொலிஸாரின் உதவியுடனும், இராணுவத்தினரை ஈர்ப்பதற்காகவும் நடத்தப்படும் இந்த இடங்கள் பற்றி எனக்குத் தகவல்கள் கிடைத்தன'' என்றார் அவர்.
 
அதேநேரத்தில் தமிழ்த் தலைவர்களைத் தமிழர்களே கொலை செய்தமையை மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அவ்வாறான கொலைகள் இடம் பெற்றதால்தான் தன்னைப் போன்று ஓய்வு பெற்று ஒதுங்கி வாழ்ந்த மனிதர்கள் அரசியலுக்கு வரவேண்டியதாயிற்று என்றும் அவர் கவலைப்பட்டார். 
 
வலி. தென்மேற்கு பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனம் நடத்திய இரண்டாவது வருடாந்த இளைஞர் மாநாடு மானிப்பாய் பிரதேசசபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 
 
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்த தாவது:
 
மாற்றப்படுகின்றார்கள்
எமது கலாசாரம், வாழ்க்கை முறை, உணர்வுபூர்வமான பாரம்பரியங்கள் யாவும் கைவிடப்படும் வகையில் இளைஞர்கள் மாற்றப்படுகின்றார்கள். பணம் ஒன்றே குறிக் கோளாகச் செயற்படும் பலரால் இளைஞர்கள் திசை மாற்றப்படுகின்றார்கள்.
 
கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்த இனம் எங்களது இனம். போரினால் கல்வியைத் தொடர முடியாமல் போனவர்கள் பலர். இதனால் எமது இனத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது. அதை நிரப்ப இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும்.
 
எமது அரசியல் கட்சிகள்கூட வயது முதிந்தவர்களைக் கொண்டே இயங்குகின்றன. அடுத்த கட்ட தலைவர்களாக அறிவு முதிர்ந்த இளைஞர், யுவதிகளை நாங்கள் இப்பொழு திருந்தே அடையாளம் கண்டு முன்னேற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
மன்னிக்க முடியாத குற்றம்
உங்களில் பலர் என்னை ஏசினாலும் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன். அண்மைக் காலத்தில் எம்முடைய கொள்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்று எண்ணி எங்கள் அரசியல்வாதிகள் பலரைக் கொன்று குவித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
 
இன்று என்னைப் போன்ற ஒரு ஓய்வுபெற்று, ஒதுங்கி வாழ்ந்த மனிதனை அரசியலுக்குள் கொண்டு வந்திருக் கின்றீர்கள் என்றால் எங்கள் அரசியல் தலைவர்களை நாங்கள் கொன்று குவித்தது தான் அதற்குக் காரணம் அல்லவா?
ஜனநாயகம் என்பதை உலகத்தின் பல நாடுகள் கட்டிக்காத்து வருகின்றன என்றால் அதற்குக் காரணம் வல்லாட்சி செய்வது வருத்தத்தையே உண்டுபண்ணும் என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டது தான் என்றார்.


Police pushing Tamil youth into drugs and prostitution says Wigneswaran

09 February 2014
The Chief Minister of the Northern Province CV Wigneswaran has stated that Tamil youth are being pushed into drugs and prostitution with the help of the Sri Lankan military, earlier this month.

Addressing the ‘Southwest Youth Association’ in Maanippai, Wigneswaran told the audience that brothels were being built with Tamil women as prostitutes and youths being pushed into using cocaine and other drugs.

Noting that problems on this scale were new to the Northern Province, he went on to add that these issues have led to Tamil youth abandoning their culture and tradition.

See the full report from the Uthayan (in Tamil) here.