[ வெள்ளிக்கிழமை, 24 சனவரி 2014, 12:06.09 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் குணரட்ணம் சர்வானந்தாவிற்கு இன்று கிளிநொச்சி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தொலைபேசி மூலம் சர்வானந்தாவைத் தொடர்புகொண்ட கிளிநொச்சி மாவட்ட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், அவரைத் தமது கிளிநொச்சி அலுவலகத்திற்கு வரும்படி பணித்தனர்.
அதன்படி மதியம் 1 மணியளவில் அவர்களது அலுவலகத்திற்குச் சென்ற சர்வானந்தாவை அங்கிருந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அச்சுறுத்தும் வகையில் தமது விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவரை முன்னாள் போராளியா எனக் கேட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். அத்துடன் இவரைப் புகைப்படம் எடுத்துள்ளதுடன், எந்த நேரத்திலும் சர்வானந்தா கைது செய்யப்படலாம் என்று மிரட்டப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடைய அலுவலகத்தில் இவர் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலானது இளைஞர்கள் மத்தியில் பீதியினை ஏற்படுத்தியுள்ளது.
Translate this page

Kilinochchi District Secretary of Youth Wing Terrorism Threat
[Friday, 24 January 2014, 12:06.09 PM GMT]

Sarvananthan contacted by phone this morning Kilinochchi district PTA groups, and ordered him to come to his office in Kilinochchi.
1 pm in the afternoon, according to their offices there last Sarvananthan threatening terror group has carried out their investigations.
Asked the former poraliya threatened him. The photo taken with him, would be arrested at any time Sarvananthan sent bullied.
C MP. Ciritaran his staff in their office said. Ivarirku death threats caused panic among the youth.