சிறையில் பொங்கல்...
15-01-2015 03:30 PM
தமிழர் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், கொழும்பு வெலிகடை சிறைச்சாலை மற்றும் கொழும்பு புதிய மெகசின் விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகளின் தைபொங்கல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றது. இதில், தமிழர் முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனினால், கைதிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சிறைச்சாலைகளின் பொறுப்பதிகாரிகள், குற்றத்தடுப்பு பிரிவின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: வருண வன்னியாராச்சி)






15-01-2015 03:30 PM