Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, January 23, 2015

[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 07:29.19 AM GMT ]
மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த அமைச்சின் ஊடாக வட கிழக்கு உற்பட ஏனைய பிரதேசங்களிலும் துன்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சேவையாற்றுவேன்.
இந்த பிரதியமைச்சுப் பொறுப்பை எனக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நன்றி.
வடக்கில் வாழ்ந்த மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்காக கூடுதலான நிதி மற்றும் ஏனைய அமைச்சர்களின் உதவியையும் பெற்றுக்கொள்வேன்.
கடந்த யுத்த காலத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் வாடுகின்றனர். இவர்களது தாய், தந்தையர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் மிகவும் துன்பநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களை உரிய விசாரணைகளை மேற்கொண்டு விடுதலை செய்யப்படல் வேண்டும்.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை பெறுவார்கள். அதற்காக ஜனாதிபதி பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.