தந்தை மகனின் உருவப்படங்கள் பொறித்த 68000 கடிகாரங்கள் மீட்பு
சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபிம பிரதேசத்தில் உள்ள துறைமுக களஞ்சியசாலை ஒன்றிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உருப்படங்கள் பொறிக்கப்பட்ட 68 ஆயிரம் சுவர் கடிகாரங்களும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அச்சிடப்பட்டிருந்த ஒருதொகை போஸ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த களஞ்சியசாலையானது துறைமுக அதிகாரிக்கு 15 இலட்சத்துக்கு மேல் பணம் செலுத்தி பெறப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.