வைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சியில் வைத்துக் கூறியுள்ளார். வைக்கோல் பட்டடை என்று குறிப்பிட்டது எங்கள் வடமாகாண மக்களை, வடமாகாண சபையை நாய் என்று கூறியுள்ளார்.
இன்று புதன்கிழமை மாலை 04.30 மணிக்கு தொண்டமனாறு நீர்ப்பாசன திணைக்கள வளாகத்தில் நடைபெற்ற வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.