வைகோ தலைமையில் இன்று போராட்டம்

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமியின் தலைமையில் சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.
சர்வதேச விசாரணைக்குழு, இந்தியாவில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா அனுமதிக்க வேண்டும். அத்துடன், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பலநூற்றுக் கணக்கானவர்கள் இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமியின் தலைமையில் சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.
சர்வதேச விசாரணைக்குழு, இந்தியாவில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா அனுமதிக்க வேண்டும். அத்துடன், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பலநூற்றுக் கணக்கானவர்கள் இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.