Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, July 21, 2014



[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 09:25.08 AM GMT ]
யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர் பிரிவில் உள்ள 800 ஏக்கர் நிலத்தை இராணுவ முகாமிற்காக படையினர் உதவியுடன் நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்ட வேளை இக்காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு நிறுத்தியுள்ளனர்.
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர் பிரிவில் புல்லாவெளி, தட்டாஞ்சேனை, மண்டலாய் மற்றும் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில்வயல் கிராமசேவகர் பிரிவில் உள்ள வயல் விடுதி கிராமத்தையும் உள்ளடக்கிய சுமார் 800 ஏக்கர் பரப்பளவுள்ள காணியை இராணுவத்தின் 533வது பிரிவுக்காக நில அளவையாளர்கள் அளக்க முற்பட்டவேளை இக்காணிகளுக்கு சொந்தமானவர்களும் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு நிறுத்தியுள்ளனர்.
குறித்த இடத்திற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை அமைச்சர் ஜங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை மற்றும் பரஞ்சோதி ஆகியோரும், வல்வெட்டித்துறை நகரசபை உபதலைவர் சதீஸ், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா, பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர் சுரேன், ஊடகவியலாளர் சுரேன் உள்ளிட்டவர்கள் சென்று நேரில் மக்களுடனும் நில அளவையாளர்களுடன் கருத்தறிந்துள்ளனர்.
மேற்படி இந்தக் காணிச் சொந்தக்காரர்களிடம் காணி உரிமைக்கான ஆவணங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இராணுவத்தால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
i