Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, April 14, 2014

 ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:-


மந்திகையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இணைப்பு 2 மேலதிக படங்களுடன்:-
ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:-
வீரகேசரி மற்றும் தினக்குரலின் வடமராட்சி செய்தியாளர் சிவஞானம் செல்வசிவன்  யாழ் புறாப்பொறுக்கியில்  வைத்து இனம் தெரியாத இருவரால் வழிமறிக்கப்பட்டு  விசாரிக்கப்பட்ட பின்னர் இரும்புக்கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார் .உயிரிற்கு ஆபத்தான நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:-

வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக தாக்கி உள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளது. சற்று முன் இடம்பெற்ற தாக்குதலில் தப்பி ஓட முற்பட்ட செல்வதீபன் மீது கலைத்துச் சென்ன இன்ம் தெரியாதோர் மேலும் தாக்கியபோது கல் முறிவடைந்திருக்கலாம் என  மந்திகை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.