Tuesday, December 30, 2014

மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் எதுவும் கிடையாது: சம்பந்தன் திட்டவட்டமாக அறிவிப்பு

Submitted by Priyatharshan on Tue, 12/30/2014
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Homeஇராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ளல், காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், பொது வேட்பாளருக்கு பரிபூரண ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டார்.

த.தே.கூ. உடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை : மைத்திரி யாழில் தெரிவிப்பு

20141230_182558Athavan News
DEC 30, 2014 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்துகொள்ளவில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன யாழில் தெரிவித்துள்ளார்.