அரசாங்கம் மறுத்தால் மலையக உறவுகளுக்கு வடக்கு - கிழக்கில் காணிகளை வழங்கத்தயார் :சுரேஷ் எம்.பி.
கொஸ்லந்தையில் மண் சரிவு அனர்த்தத்தில் எமது மலையக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் அபாயத்தினை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இவ்வாறான நிலையில் அம்மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக அரசாங்கம் காணிகளை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மீரியபெத்தவுக்கு நேற்று விஜயம் செய்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக தமது அனுதாபங்களை தெரிவித்ததுடன் முகாம்களில் உள்ள மக்களிடத்தில் நீண்டநேரமாக கலந்துரையாடிருந்தது. இதன்போதே அம்மக்களிடத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்தது.
அரசாங்கம் மலையகத்தில் மண் சரிவு அபாயம் உள்ளதாக பல இடங்களை குறிப்பிட்டுக் கூறியுள்ளது. இவர்களை உரிய இடங்களில் இருந்
தும் வெளியேற்றும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இது போன்றே கொஸ்லந்தை பகுதியிலும் மண் சரிவு அபாயத்தினை காரணம் காட்டி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தும் வெளியேற்றும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இது போன்றே கொஸ்லந்தை பகுதியிலும் மண் சரிவு அபாயத்தினை காரணம் காட்டி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு தொடர்பான அச்சம் காரணமாக இத்தகைய பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளமையை காண முடிகின்றது. எனினும் இத்தகையோர்களுக்கு புதிதாக வீடமைத்துக் கொள்ளும் பொருட்டு அரசாங்கம் உரிய காணிகளை வழங்குவதில் பின்னடிப்பையே செய்து வருகின்றது. காணிகள் வழங்கப்படுமிடத்து வீடமைப்பிற்கென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் இன்னும் பல தொண்டர் நிறுவனங்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும் என்பதே உண்மை.
மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கும் அரசு காணிகளை வழங்க மறுக்குமிடத்து வடக்கு கிழக்கில் நாம் காணிகளை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணிகள் வழங்கப்பட வேண்டும். பல்வேறு அமைப்புக்களுடன் கலந்து பேசி வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம். நாங்கள் யுத்தத்தினால் பல பாதிப்புக்களை எதிர்கொண்டு பல இழப்புக்களையும் சந்தித்திருக்கின்றோம். இழப்புகளின் வலி எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, இயன்ற உதவிகளை நாம் செய்வோம்.


.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)
.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)

.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)
.jpg)
.jpg)
.jpg)
